tamilnadu

img

100 நாள் வேலைத் திட்டத்தில் புகுத்தப்பட்ட இயந்திரங்கள் பறிமுதல்....

ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 100 நாட்கள் வேலைத் திட்டத்திற்குள் புகுத்தப்பட்டுள்ள அனைத்து இயந்திரங்களையும் பறிமுதல் செய்யுமாறு, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்.

மன்மோகன் சிங் தலைமையிலான முதலாவது ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், இடதுசாரிகளின் முன்வைத்த ஆலோசனையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டதுதான் 100 நாள்வேலைத்திட்டம் எனப்படும் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்” ஆகும். கிராமப்புற மக்களுக்கு, ஒருஆண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களாவது வேலை கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் திட்டமாகும். மனித உழைப்பு மூலமாக மட் டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது, இந்த திட்டத்தின் முக்கிய விதியாகும். இதன் மூலம்கோடிக்கணக்கானோர் பயனடைகின்றனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் பலமுறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, பொக்லைன் இயந்திரம் மூலம் ஒரு குளத்தை வெட்டிவிட்டு, அதனை தொழிலாளர்கள் பெயரில் அவர் களுக்கு சம்பளம் கொடுத்தது போலகணக்கு காட்டியுள்ளனர்.இந்த தகவலை அறிந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் உள்ள அனைத்து இயந்திரங்களையும் பறிமுதல் செய்து ஒரு மாதத்துக்குக் காவல் நிலையத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.இந்த இயந்திரங்களை 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ்பயன்படுத்துவது தெரிந்தால் மேலும்மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

“ஒரு ஊராட்சியில் குறைந்தது 300 பேருக்கு வேலை வழங்க வேண் டும் என்பதே தங்களது அரசின் லட்சியம்; மழைக்காலங்களில் பல பணிகள் தற்காலிகமாக நிற்க வாய்ப்பு உள்ளதால், துணை ஆணையர்கள் புதிய பணிகளைக் கண்டறிய வேண்டும்; எந்த ஒரு கிராம வாசியும் உணவின்றி பட்டினியால் மரணம் அடைந்தார் என்னும்நிலை வரக்கூடாது. அவ்வாறு செய்திவந்தால் அது அவமானமானது மட்டும் அல்ல துயரம் அளிக்கக் கூடியதாகும்” என்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்.

;